Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கார்த்திக் - வைபவ் இணையும் ஜிந்தா!
அனேகன் படம் மூலம் மறுபிரவேசம் செய்துள்ள நடிகர் கார்த்திக் அடுத்து வைபவுடன் கை கோர்க்கிறார். இந்தப் படத்துக்கு ஜிந்தா என்று தலைப்பிட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்' படத்தில் நடித்த சுஷ்மா ராஜ் நடிக்கிறார். படத்தில் வைபவ் நாயகன் என்றாலும், அவருக்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் கொண்ட பாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறாராம்.
இந்த படத்தை எஸ்.ஏ.எப்.சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் சார்பாக எஸ்.ஏ.ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் வசந்திடம் பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியின் மகன் ஹசார் காசிப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படம் குறித்து வெற்றிச் செல்வன் கூறுகையில், "இந்தக் கதை முற்றிலும் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதைக்கு உற்சாகமும், துள்ளலும்தான் மூலதனம். இந்தக் கதையை நான் எழுதும் போதே என் மனதில் வந்து அமர்ந்தவர்கள் கார்த்திக்கும், வைபவும்தான். அவ்வளவு பொருத்தமாக இருந்தனர். தயாரிப்பாளர் ராஜா என்னுடைய நெருங்கிய நண்பர்.
என்னுடைய கதையைக் கேட்ட உடனே எனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு அளித்தமைக்கு நான் என்றென்றும் கடமைபட்டு இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒளிபதிவாளராக பணியாற்றுபவர் போஜன் கே தினேஷ். படத்தொகுப்பு கே எம் ரியாஸ் முஹம்மது . 'ஜிந்தா' எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்," என்றார்.