Don't Miss!
- News உயிரை கையில புடிச்சுகிட்டு போகவேண்டி இருக்கே! கிளாம்பாக்கம் வாசலில் நடக்கும் திக்.. உடனே கவனிக்கணும்
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி
சென்னை: 92 வயதிலும் இளைஞனை போன்று துடிப்புடன் கலைத்துறையில் ஈடுபட்டவர் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதி தமிழ் சினிமா துறைக்கு ஆற்றிய பங்கு மிகப் பெரியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு பராசக்தி, எம்.ஜி.ஆருக்கு ஒரு மந்திரி குமாரியை அளித்து அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டியவர் கருணாநிதி.
அவர் எழுதும் வசனங்களில் அர்த்தம் பொதிந்திருக்கும்.
பராசக்தி
பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் பேசிய ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற வசனம் இன்று கூட மிகவும் பிரபலம்.
கோவில்
பராசக்தி படத்திலேயே
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்..
கோவில் கூடாது என்பதற்காக அல்ல
கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக
பூசாரியைத் தாக்கினேன்
அவன் பக்தன் என்பதற்காக அல்ல
பக்தி பகல் வேஷமாகிவிட்டதை கண்டிப்பதற்காக
ஆஹா, என்ன ஒரு தீர்க்கதரிசனமான வசனம்.
64 ஆண்டுகள்
1947ம் ஆண்டு ராஜகுமாரி படம் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கிய கருணாநிதி 2011ம் ஆண்டு வரை 64 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். படங்கள் தவிர்த்து அவர் 21 நாடகங்களை எழுதியுள்ளார். அவர் திரைக்கதை எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர் ஆகிய படங்கள் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகின.
சீரியல்
கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சி தொடர் ஸ்ரீ ராமானுஜர். அந்த தொடருக்கு வசனம் எழுதியபோது கருணாநிதிக்கு 92 வயது. ஸ்ரீ ராமானுஜர் தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தனது கலை சேவையை தொடர அவர் மறந்ததே இல்லை.