போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது #அக்கப்போர்: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
சென்னை: நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாரா சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக் கணக்கில் யோசிப்பவர.. என்று நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
8 ஆண்டுகள் கழித்து ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது குறித்து பேசினார். ஆனால் அவர் அரசியலுக்கு வருவேன் என்றோ, வர மாட்டேன் என்றோ தெளிவாகப் பேசவில்லை.
இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தலைவர்
நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர..
போர்
போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது. #அக்கப்போர் #toolate
ரசிகர்
கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் போட்டுள்ள கமெண்ட்டில் கூறியிருப்பதாவது, ரஜினி sir உலகம் முழுவதும் பல கோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார், அவரை சினிமா துறையில் இருந்து கொண்டே விமர்சனம் செய்யறிங்களே எவ்வளோ கேவலம்?
விரக்தி
ரசிகரின் கமெண்ட்டை பார்த்த கஸ்தூரி ட்வீட்டியிருப்பதாவது, நான் அதிதீவிர ரஜினி ரசிகை. இப்போ பேசினது விமர்சனம் இல்ல, விரக்தி.எல்லார் மனசுலயும் இருக்கற ஆதங்கத்தைதான சொல்லியிருக்கேன்? என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications