twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் அடுத்த படமே வரப் போகுது.. ஆனா கத்தி கதை வழக்கு முடியவில்லை!

    By Shankar
    |

    விஜய்யின் அடுத்த படமான புலியும், கத்தி கதை வழக்கின் தீர்ப்பும் ஒன்றாகத்தான் ரிலீசாகும் போலிருக்கிறது.

    கத்தி படத்தின் கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Kaththi story case postponed to July 15th

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு கோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர் (வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    The case on Vijay's starrer Kaththi story was postponed to July 15th by Tanjore Sessions Court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X