விஜய்யின் புலியுடன் மோதுகிறது புது இயக்குநரின் கத்துக்குட்டி!
அக்டோபர் முதல் தேதி விஜய்யின் புலி படம் ஸோலோவாக வரும் என்று பலரும் எதிர்ப்பார்க்க, அந்தப் படத்தோடு மல்லுக் கட்டத் தயாராகிறது கத்துக்குட்டி.
இயக்குநர் இரா சரவணன் புதியவர் என்றாலும், தன் கதை மீது கொண்டுள்ள அழுத்தமான நம்பிக்கை காரணமாக புலியுடன் மோதுகிறார்.
அதுவும் 240 அரங்குகளில் கத்துக்குட்டியை கெத்தாக வெளியிடுகிறார்.

நரேன் - சூரி நடித்துள்ள கத்துக்குட்டி, பக்கா கிராமத்துப் படம். அதுவும் இன்றைய கிராமத்தைச் சொல்லும் படம். யு சான்றிதழ், வரி விலக்கு என எல்லா சாதகமான அம்சங்களோடும் வெளிவரவிருக்கிறது.
"விவசாயிகளுக்கான படம் இது. அதை காந்தி பிறந்த நாளையொட்டி வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அக்டோபர் முதல் தேதி வெளியிடுகிறோம். அந்தத் தேதியில் வேறு யார் படம் வெளியாகிறது என்றெல்லாம் நான் பார்க்கவில்லை," என்கிறார் இரா சரவணன்.


Click it and Unblock the Notifications











