ஒரு லாங்குவேஜ்னா ரெண்டு... ரெண்டு லாங்குவேஜ்னா மூணு... சம்பளத்தை ஏற்றிய கீர்த்தி!
அறிமுகமான சில படங்களிலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்து விட்டார் கீர்த்தி சுரேஷ். போதாதகுறைக்கு தெலுங்குப் பக்கம் போய் அங்கும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டார். இதனால் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டும் சம்பளமும் எகிறி இருக்கிறது.
கீர்த்தி அடுத்து நடிப்பது சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில். இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் படமாவதால் மூன்று கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். தயாரிப்பாளரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஒரே ஒரு மொழியில் தான் படம் ரிலீஸ் என்றால் இரண்டு கோடி சம்பளமாம்.

தென்னிந்திய நடிகைகளில் நயன் தாரா, அனுஷ்காவுக்கு அடுத்து மூன்று கோடியைத் தொட்டிருப்பது கீர்த்தி சுரேஷ்தான். அபார வளர்ச்சிதான்!
Comments


Click it and Unblock the Notifications