Don't Miss!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செய்றேனா, இல்லையான்னு மட்டும் பாருங்க: அம்மாவிடம் சவால் விட்ட கீர்த்தி சுரேஷ்
சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததன் மூலம் தனது அம்மாவிடம் போட்ட சபதம் நிறைவேறிவிட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் படம் குறித்து கீர்த்தி கூறியிருப்பதாவது,
கதாபாத்திரம்
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண்ணாக நடித்துள்ளேன். விக்னேஷ் சிவன் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது.
ரசிகை
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே சூர்யா சாரின் தீவிர ரசிகை. என் அம்மா சூர்யாவின் தந்தை சிவக்குமாருடன் 3 படங்களில் நடித்திருந்தார்.
தானா சேர்ந்த கூட்டம்
ஒரு நாள் நான் சிவக்குமாரின் மகனுடன் நடிக்கிறேனா இல்லையான்னு பாருங்க என என் அம்மாவிடம் சபதம் செய்தேன். சூர்யா சாருடன் நடிக்கும் என் கனவு நிறைவேறிவிட்டது.
ஆலோசனை
சூர்யா சார் அமைதியாக இருப்பார், அதிகம் பேச மாட்டார். ஆனால் ஏதாவது ஆலோசனை கேட்டால் தயங்காமல் உதவி செய்வார். நானும் கார்த்திக் சாரும் எந்த காட்சியிலும் சேர்ந்து நடிக்கவில்லை. அவர் எங்க அம்மா செட் என்றார் கீர்த்தி சுரேஷ்.