Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முன்னாள் முதல்வர் வீட்டு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்?
ஹைதராபாத்: முன்னாள் முதல்வர் வீட்டு மருகளாகப் போகிறாராம் கீர்த்தி சுரேஷ்.
மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். யாத்ரா என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மாகி ராகவ் இயக்குகிறார்.
படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா
யாத்ரா படத்தில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியாக மம்மூட்டி நடிக்கிறார். அவர் மனைவியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் கழித்து மம்மூட்டி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
மருமகள்
யாத்ரா படத்தில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகனின் மனைவி ஒய்.எஸ். பாரதியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
யாத்ரா
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷை தேடி மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று பட வாய்ப்பு வந்துள்ளது. அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வார் என்று நம்பப்படுகிறது.
லேடி சூப்பர் ஸ்டார்
நயன்தாரா போன்று ஆக ஆசைப்படும் கீர்த்தி சுரேஷுக்கு அவர் மருமகளாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.