திடீர் 'நாட் ரீச்சபிள்'... தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை சாவித்திரியாகவே நடிக்கிறார்.
திடீரென்று சில நாட்களாக கீர்த்தி சுரேஷின் மொபைல் நாட் ரீச்சபிளுக்கு சென்று விட்டது. அவரை கமிட் செய்திருந்த தயாரிப்பாளர்கள் பதறி விட்டார்களாம். உடனே அவரது அம்மா மேனகா சுரேஷ் மொபைலுக்கு கால் பண்ணி இருக்கிறார்கள். அவர் ரொம்ப கூலாக அவ வெக்கேஷன்ல இருக்கா... வந்துடுவா என்று பதிலளித்திருக்கிறார்.

நடிகைகள் பெர்சனல் டார்ச்சர்களுக்கு பயந்து மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்வது வழக்கம் தான். அப்படி எதுவும் இருக்குமோ என்று விசாரித்தால் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு என்பதால் பெர்ஃபார்மென்ஸுக்காக தனி பயிற்சி எடுத்துக்கொள்ள சென்று விட்டதாக தகவல் உலவுகிறது.
Comments


Click it and Unblock the Notifications