Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெயமாலா மீது சபரி மலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயில் சாமி சிலையை நடிகை ஜெயமாலா தொட்டதாக கூறியது உண்மையல்ல, நாடகம் என்று ஜெயமாலா மீது கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் பி.உன்னிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ஏ.என்.ரகுபதி ஆகியோரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
2006-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சபரிமலையில் தேவ பிரசன்னம் பார்த்த ஜோதிடர் பி. உன்னிகிருஷ்ண பணிக்கர், கோயில் கருவறைக்குள் பெண் ஒருவர் நுழைந்து சுவாமி சிலையை தொட்டுவிட்டதாகக் கூறினார். அந்தப் பெண் ஒரு நடிகை என்றும், நடனம் தெரிந்தவர் என்றும் கூறினார். சபரிமலை கோயிலுக்குள் செல்ல 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இத்தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது எனப் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், சபரிமலைக்கு வந்திருந்தபோது சுவாமி சிலையை தொட்டதாக நடிகை ஜெயமாலா, கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்து, நாடகத்தை நடத்தியதாக போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து ஜெயமாலா உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், கூட்டுச் சதி செய்து தவறான தகவலைப் பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி
ஜெயமாலா உள்ளிட்ட மூவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சதீஷ் சந்திரன் விசாரித்தார்.
அவர் அளித்த தீர்ப்பில், "பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் ஜெயமாலா, உன்னிகிருஷ்ண பணிக்கர், ரகுபதி ஆகியோர் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கையை தொடர முடியாது. எனவே அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது; வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.