Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேவையில்லாமல் போஸ்ட் போட்டு மலையாளிகளிடம் வாங்கிக் கட்டிய "மாங்கா"
சென்னை : பிரேம்ஜி அமரனுக்கு வாயில் வாஸ்து சரியில்லை போலும். தேவையில்லாமல் ஒரு போஸ்ட்டைப் போடப் போய் மலையாளிகளிடம் செமையாக வாரிக் கட்டிக் கொண்டுள்ளார்.
மாங்கா என்று எந்த நேரத்தில் படத்தில் நடித்தாரோ, அவர் செய்யும் சில செயல்கள் மாங்காத்தனமாகவே இருக்கின்றன என்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரேம்ஜி அமரன்.
தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்ட ஒரு போஸ்ட் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது கேரளாவில்.
மது பார்களுக்கு தடை...
மது வாடை அதிகம் வீசும் மாநிலங்களில் முக்கியமானது கேரளா. அப்படிப்பட்ட மாநிலத்தில் மது பார்களுக்கு அந்த மாநில அரசு தடை விதித்து மூடி விட்டது. இதை வைத்து பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார் பிரேம்ஜி. அதுதான் சிக்கலாகி விட்டது.
கோட்டயத்துக்கு வழி...
கேரலாவில் வைக்கப்பட்டிருந்த ஒரு போக்குவரத்து சைன் போர்டுதான் சிக்கலுக்குக் காரணம். அந்த சைன் போர்டில் கோட்டயம் என்ற ஊருக்கு 3 விதமான வழிகளில் போகலாம் என்பது போல உள்ளது. அந்தப் படத்தைப் போட்டு அதில், you think may be it was a good thing they banned alcohol in the state?" என்று கருத்து போட்டிருந்தார் பிரேம்ஜி அமரன் ( தற்போது அதை நீக்க விட்டார்). இதுதான் பிரச்சினைக்கு காரணமா்கி விட்டது.
போட்டோஷாப்...
உண்மையில் அது போட்டோஷாப் செய்யப்பட்ட சைன் போர்டு அது என்று பின்னர்தான் தெரிய வந்துள்ளது. இதனால், கேரளாவில் உள்ளவர்கள் எல்லாம் குடிகாரர்களா, கேரள மக்களை கேவலப்படுத்துது போல எப்படி பிரேம்ஜி கருத்து போடலாம் என்று மலையாளிகள் பிரேம்ஜியின் பேஸ்புக் பக்கத்தில் குவிந்து குதறி எடு்துத விட்டனர். இந்னும் கூட ஓயாமல் வந்து ஒப்பாரி வைத்து வருகின்றனர்.
மாங்கா.. மாங்கா...
பலர் ஆங்கிலத்தில் பட்டி என்று ஆரம்பித்து மாங்கா என்று திட்டி முடிக்கின்றனர். பலர் மலையாளத்திலேயே வந்து திட்டி விட்டுப் போகின்றனர். பலர் முல்லைப் பெரியாறு பிரச்சினையயும் சேர்துத வைத்து அசிங்கமாக எழுதி வருகின்றனர்.
என்னக் கொடுமை சார் இது...
இன்னும் சிலரோ, நீ நடிப்பதை நாங்கள் மது போதையில் இருந்தாலும் கூட ரசிக்க மாட்டோம் என்று எழுதியிருப்புதான் ரொம்பக் கொடுமை
என்ன கொடுமை பிரேம்ஜி இது.!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!