பாவனா விவகாரம்... நடிகர் திலீப் மீது வழக்கு!

By Shankar

பாவனாவை கீழ்த்தரமாகப் பேசியதாக நடிகர் திலீப் மீது கேரள மகளிர் ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ந் தேதி இரவு, ஒரு சினிமா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு காரில் திரும்பியபோது, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, காரிலேயே மானபங்கப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Kerala Women Commission files case on Dileep

இந்நிலையில், பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து திலீப் மற்றும் அவரது 2வது மனைவி காவ்யா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறது கேரள போலீஸ். பாவனாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, பாவனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக திலீப், நடிகர் சலீம் குமார் உள்பட 4 பேர் மீது கேரள மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திலீப் உள்ளிட்டோர் மீது மகளிர் ஆணையம் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X