Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேரளாவில் இருந்து கடத்தப்பட்ட துணை நடிகை - சென்னையில் போலீசார் வலைவீச்சு
சென்னை: கேரளாவில் இருந்து சினிமா வாய்ப்பு அளிப்பதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி வரப்பட்ட துணை நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தை அடுத்த கொச்சியை சேர்ந்தவர் லட்சுமி. 10ம் வகுப்பு வரை படித்த இவர், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு (2011) மே மாதம் பெட்ரோல் பங்க்கிற்கு வந்த ஒரு நபர், லட்சுமியுடன் பேசியாக கூறப்படுகின்றது. அதன்பிறகு லட்சுமியை காணவில்லை.
இது குறித்து லட்சுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் குருவாயூரை சேர்ந்த ஷெபிக் என்ற கார் டிரைவர், லட்சுமிக்கு சினிமா ஆசைக்காட்டி சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
அதன்பிறகு கார் டிரைவர் ஷெபிக், போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஷெபிக்கிடம் நடத்திய விசாரணையில், காணாமல் போன லட்சுமி தற்போது சென்னையில் தங்கியிருப்பதாகவும், சினிமா மற்றும் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருவதாகவும் தெரிய வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னையில் உள்ள துணை நடிகை ஏஜெண்ட்களிடம் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போரூரில் உள்ள ஒரு வீட்டில் விசாரித்த போது, அங்கு தங்கியிருந்த லட்சுமி சமீபத்தில் காலி செய்ததாக போலீசாருக்கு தெரிய வந்தது.
சென்னையில் தங்கி இருப்பதாக கூறப்படும் துணை நடிகை லட்சுமியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.