twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளாவில் இருந்து கடத்தப்பட்ட துணை நடிகை - சென்னையில் போலீசார் வலைவீச்சு

    |

    சென்னை: கேரளாவில் இருந்து சினிமா வாய்ப்பு அளிப்பதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி வரப்பட்ட துணை நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.

    கேரள மாநிலம், எர்ணாகுளத்தை அடுத்த கொச்சியை சேர்ந்தவர் லட்சுமி. 10ம் வகுப்பு வரை படித்த இவர், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு (2011) மே மாதம் பெட்ரோல் பங்க்கிற்கு வந்த ஒரு நபர், லட்சுமியுடன் பேசியாக கூறப்படுகின்றது. அதன்பிறகு லட்சுமியை காணவில்லை.

    இது குறித்து லட்சுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் குருவாயூரை சேர்ந்த ஷெபிக் என்ற கார் டிரைவர், லட்சுமிக்கு சினிமா ஆசைக்காட்டி சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    அதன்பிறகு கார் டிரைவர் ஷெபிக், போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஷெபிக்கிடம் நடத்திய விசாரணையில், காணாமல் போன லட்சுமி தற்போது சென்னையில் தங்கியிருப்பதாகவும், சினிமா மற்றும் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருவதாகவும் தெரிய வந்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னையில் உள்ள துணை நடிகை ஏஜெண்ட்களிடம் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போரூரில் உள்ள ஒரு வீட்டில் விசாரித்த போது, அங்கு தங்கியிருந்த லட்சுமி சமீபத்தில் காலி செய்ததாக போலீசாருக்கு தெரிய வந்தது.

    சென்னையில் தங்கி இருப்பதாக கூறப்படும் துணை நடிகை லட்சுமியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    Read more about: கடத்தல் kidnap
    English summary
    Lakshmi, a Keralite actress was kidnapped by a car driver from Ernakulam to Chennai. A team of police is searching the actress after a complaint filed by her parents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X