கமலுடன் கிஷோர்.. முதல் முறையாக.. தூங்காவனத்தில்!

By Manjula

சென்னை: தூங்கா வனம் படத்தில் நடிகர் கமலுடன் வில்லனாக மோதவிருக்கிறார் கன்னட நடிகர் கிஷோர்.

தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் தூங்கா வனம் படத்தில் ஏற்கனவே இன்னொரு வில்லனாக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ள நிலையில் தற்போது கிஷோரும் ஒப்பந்தமாகி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை திரையுலகில் அதிகரித்து இருக்கிறது.

Kishore in Kamal Haasan’s Thoongavanam

உத்தம வில்லனைத் தொடர்ந்து பாபநாசம் படத்தை வெளியிட இருக்கும் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக தூங்கா வனம் படத்தில் தற்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

படத்தை கமலின் நீண்ட நாள் உதவியாளரான ராஜேஷ் இயக்குகிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்தது. விழாவில் நடிகர் பிரகாஷ்ராசுடன் கிஷோரும் கலந்து கொண்டதால் படத்தில் மற்றொரு வில்லனாக கிஷோரும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கிஷோரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தூங்கா வனம் படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் படத்தில் நான் என்ன ரோலில் நடிக்கவிருக்கிறேன் என்பது ரகசியம் என்று கிஷோர் கூறியிருக்கிறார்.

தமிழில் மிகச் சிறந்த வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் கிஷோர் தற்போது துந்து கைக்கள் சாவாச என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஹைதராபாத்தில் நடந்து வரும் தூங்கா வனம் படத்தின் படப் பிடிப்புக் குழுவினருடன் இணைந்து கொள்ளவுள்ளார். இன்னும் இரண்டு மாதத்தில் தூங்கா வனம் படத்தின் தமிழ் படப் பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

தூங்காவனம் முத்தக் களமாக இருக்குமா அல்லது யுத்தக் களமாக மாறுமா..பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X