கோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்து

பெங்களூரு: ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி தயாரித்திருந்தார்.

பட தயாரிப்புக்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார்.

இதற்காக முரளி தாக்கல் செய்திருந்த ஆவணங்களுக்கு, ரஜினியின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்து போட்டிருந்தார்.

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்

3டி தொழில்நுட்பத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ‘கோச்சடையான்' படம், கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கியிருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருந்த போதும், மேக்கிங்கில் சொதப்பியதால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

கோச்சடையான் தயாரிப்பில் சிக்கல்

கோச்சடையான் தயாரிப்பில் சிக்கல்

'கோச்சடையான்' படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் முரளி என்பவர் தயாரித்திருந்தார். இவர் 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், முரளி தாக்கல் செய்திருந்த ஆவணங்களுக்கு, ரஜினியின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்து போட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முரளி கடனாகப் பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

லதா ரஜினிகாந்த் மீது வழக்கு

லதா ரஜினிகாந்த் மீது வழக்கு

இதனால், கடந்த 2015-ம் ஆண்டு லதா ரஜினிகாந்த் மீது, அபிர்சந்த் நஹார் முரளி, பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது, ஆதாரங்களைத் திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Recommended Video

கைல காசு இருக்காது, Rajini-க்கு 1 வடை, BharathiRaja speech *Kollywood
லதா ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு

லதா ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கு

இதனையடுத்து, தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ‘‘குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறியது. எனவே அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அதேநேரம் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463, அதாவது ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவின் கிழ் மட்டும் விசாரணை நடத்தலாம்' 'என உத்தரவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X