2015-ல் சர்வதேச அளவில் வெளியாகிறது கோச்சடையான்.. தயாரிப்பாளர் அறிவிப்பு
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் சர்வதேச மொழிகளில் 2015-ம் ஆண்டு வெளியிடப்படும் என தயாரிப்பாளர் முரளி மனோகர் அறிவித்துள்ளார்.
கோச்சடையான் படம் கடந்த மே மாதம் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி மற்றும் பஞ்சாபி மொழிகளில் வெளியானது.

தமிழில் இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் சுமாராகப் போனது. மற்ற மொழிகளில் இந்தப் படம் சரியாகப் போகவில்லை. வெளியீட்டுத் தேதிகளில் நடந்த குழப்பமே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கோச்சடையானை ஆங்கிலத்தில் வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. 2015-ம் ஆண்டில் இந்தப் படம் சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் 80க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர, ஜப்பானிய மற்றும் ப்ரெஞ்ச் மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இதனை படத்தின் தயாரிப்பாளர்களான மீடியா ஒன் நிறுவனத்தின் அதிபர் முரளி மனோகர் நேற்று அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











