Just In
- 16 min ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 33 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 1 hr ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
Don't Miss!
- Finance
டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!
- News
காந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டெல்லி கேங் ரேப்... கொந்தளிக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்!
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயதுப் பெண்ணை கொடியவர்கள் இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்து கூட்டாகக் கற்பழித்துள்ள சம்பவம் நாட்டையே கொந்தளிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
மனதளவில் அன்றே இறந்துவிட்ட அந்தப் பெண் இப்போது உடல் ரீதியாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கற்பழித்த காமுகர்களை விசாரணையின்றி தூக்கில் போட அனைவருமே ஒருமனதாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனையோ கொடிய சம்பவங்களை காட்சிகளாக்கும் சினிமாக்காரர்கள் கூட, தங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வக்கிர நிகழ்வாக, வன்முறை வெறியாட்டமாக இதைப் பார்க்கின்றனர்.
நமது கோலிவுட் நட்சத்திரங்கள் இந்த சம்பவம் குறித்து என்ன கூறுகிறார்கள்...

நமீதா
நிச்சயம் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்தான். இதை அனைவருமே வன்மையாகக் கண்டிக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக இனி இதுபோன்ற ஒரு கொடுமை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நயன்தாரா
தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்த சம்பவம் இது. இன்னும் கூட நான் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. அந்த கொடியவர்கள் மீது இம்மியளவுக்குக் கூட இரக்கம் காட்டக் கூடாது.

சூர்யா
நீதி அமைப்பு முறை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்த கொடிய செயல். அந்தப் பெண்ணை சீரழித்தவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்.

தமன்னா
ஏதாவது ஒரு வழியில் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான் இப்படியெல்லாம் கொடிய செயலில் இறங்க வைக்கிறது. சட்டங்களை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
மனிதத்தனமற்ற செயல் இது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது, திரும்பத் திரும்ப இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் செயலில் இறங்குவதுதான். அந்தப் பெண்ணை சீரழித்தவர்களை தூக்கில் போடுவதுதான், பெரிய விளைவை ஏற்படுத்தும்.

த்ரிஷா
அரபு நாடுகளில் உள்ளதுபோல தீவிரமான தண்டனை முறைகள் தேவை. அந்தப் பெண்ணை சீரழித்தவர்களுக்கு தூக்கு தண்டனையை உடனடியாக தரவேண்டும். இந்தக் கருத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்காது என நம்புகிறேன்.

ஷாம்
என்ன நடக்கிறது நம் நாட்டில் என ஒரு நிமிடம் ஆடிப் போனேன் டெல்லி கற்பழிப்பு செய்தியைப் படித்ததும். என்னால் தூங்க முடியவில்லை. பெண் என்பவளும் நம்மைப் போன்ற ஒரு பிறவிதானே. அவள் மீது ஏன் இத்தனை வன்மம்... இனி யாரும் இதுபோன்ற செயல்களை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தண்டனைகள் கடுமையாக வேண்டும்.

அமலா பால்
சட்டமும் போலீசும் இந்த முறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சவூதி அரேபியாவில் தரப்படுவதைப் போல, விசாரணையற்ற மரண தண்டனையை அந்த கொடியவர்களுக்குத் தர வேண்டும்.

ஸ்ரேயா
அந்தப் பாவிகள் மீது ஈவு இரக்கமே காட்டக் கூடாது. உடனடியாக தூக்கில் தொங்கவிட வேண்டும். தண்டனை முறைகளில் மாற்றம் கொண்டுவருவதை இப்போதே தொடங்க வேண்டும்.