பாண்டியராஜன் மகன் திருமண வரவேற்பு- திரையுலகினர் வாழ்த்து
சென்னை: சென்னையில் நடந்த நடிகர் பாண்டியராஜன் மகன் பல்லவராஜனின் திருமண வரவேற்பில் திரையுலகினர் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் - வாசுகி தம்பதிகளின் மகன் பல்லவராஜனுக்கும் பல்லவிக்கும் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன், காங்கிரஸ் தலைவர் கே தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் மேயர் மா சுப்பிரமணியன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
இயக்குநர்கள் எஸ்பி முத்துராமன், கே பாக்யராஜ், பார்த்திபன், தரணி, வி சேகர், முக்தா வி சீனிவாசன், சேரன், ஜெயம் ராஜா, எஸ் ஏ சந்திரசேகரன், பேரரசு, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் ஜி தியாகராஜன், அபிராமி ராமநாதன், எடிட்டர் மோகன், கே ராஜன் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்தினர்.
நடிகர்கள் சிவகுமார், பிரபு, கவுண்டமணி, ராமராஜன், லிவிங்ஸ்டன், பரத், ராஜேஷ், விஜயகுமார், நடிகைகள் ரேகா, வடிவுக்கரசி, மீனா, அனுராதா, சரண்யா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் அழைப்பிதழ் கொடுத்து வாழ்த்துப் பெற்றார் பாண்டியராஜன்.


Click it and Unblock the Notifications











