நாளையே வெளியாகிறது கொம்பன் - தயாரிப்பாளர் அறிவிப்பு
பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள கொம்பன் படத்தை ஒரு நாள் முன்பாக, நாளையே வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.
கொம்பன் படத்துக்கு சாதிய பின்னணியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் நாடார் அமைப்புகளும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தப் படத்துக்கு எதிரான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை பிலிம்சேம்பரில் சந்தித்த ஞானவேல்ராஜா, படத்தை அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக, நாளை (புதன் கிழமை) வெளியிடவிருக்கிறோம்," என்றார்.
இதன் மூலம் கொம்பன் படம் எதிர்ப்புகளை மீறி வெளியாவது உறுதியாகிவிட்டது.
Comments


Click it and Unblock the Notifications