Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மனதில் வைராக்கியம் வைத்தால் முடிக்காமல் விடமாட்டார்... விஜய் குறித்து பகிர்ந்த பிரபல இயக்குநர்
சென்னை : நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது. இளம் இயக்குநர்களுக்கு அவர் தற்போது வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அவர்களும் விஜய்யின் ரசிகர்களாக அவரை ரசிகர்களுக்கு வித்தியாசமாக காட்டி வருகின்றனர். இதன்மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.
வன்முறையை
நம்பும்
தமிழ்
படங்கள்...இது
நல்லதா?

நடிகர் விஜய்
நடிகர் விஜய் மாஸ்டர், பீஸ்ட் என இளம் இயக்குநர்களின் கைவண்ணத்தில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் அவர் குடி உள்ளிட்ட பழக்கங்களுடன் இருக்கும் நிலையில், வில்லனான விஜய் சேதுபதி எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாமல் இருப்பார்.

மாஸ்டர் படம்
இது விஜய்யின் மாஸ் தனத்தை குறைத்ததாக என்ற சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், அவரை வித்தியாசமாக காண்பிக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றார் என்றே கூறவேண்டும். ரசிகர்கள் இந்தக் கேரக்டரை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து படத்தில் சீர்த்திருத்த பள்ளியில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு, அதை தொடர்ந்த விஜய்யின் செயல்பாடுகள் என கதை நகரும்.

பீஸ்ட் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
இந்தப் படம் சிறப்பாக வெற்றிப் பெற்றது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியான பீஸ்ட் படமும் விஜய்யை மாஸாகவே காண்பித்தது. படத்தின் திரைக்கதை, அதையொட்டிய காட்சிகள் என சில லாஜிக் மீறல்கள் படத்தில் இருந்தாலும் இந்தப் படத்தையும் விஜய்க்காகவே அவரது ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது படம் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

கலக்கல் காமெடி
விஜய்யின் ஆரம்ப கால படங்கள், கல்லூரி மாணவராக, ஆக்ஷன் ஹீரோ என பல கெட்டப்புகளில் அவர் நடித்த நிலையில், அவரால் காமெடியிலும் கலக்க முடியும் என்பதை நிரூபித்த படம் மின்சார கண்ணா. இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அவர் காதல், காமெடி என கலக்கியிருப்பார் விஜய்.

கேஎஸ் ரவிக்குமார் பாராட்டு
இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் மின்சார கண்ணா படத்தில் காமெடி கேரக்டர் தனக்கு வேண்டும் என்று விஜய் கேட்டு நடித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்தில் நடந்த பாடல் காட்சிகளிலும் அவர் சிறப்பாக நடித்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தவறிய விஜய்யை இயக்கும் வாய்ப்பு
அடுத்ததாக இரண்டு முறை விஜய்யை இயக்கும் சந்தர்ப்பம் தனக்கு கைநழுவியதாகவும், எதிர்காலத்தில் அவரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அப்படி கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் இணைந்து நடிக்கவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

விஜய் வைராக்கியம் மிகுந்தவர்
தொடர்ந்து பேசிய ரவிக்குமார், விஜய் மிகவும் வைராக்கியம் மிகுந்தவர் என்றும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதை முடிக்காமல் விடமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் திறமையானவர் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார். மின்சாரக் கண்ணா படத்தில் விஜய்யுடன் குஷ்பூ, ரம்பா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.