Just In
- 1 hr ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 2 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 2 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 2 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன
- Automobiles
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சம்பளத்தைத் திருப்பிக்கொடுத்த கே.எஸ்.ரவிகுமார் - இயக்குநர் நெகிழ்ச்சி!
சென்னை : 'மறுபடியும் காதல்' என்ற படத்தை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர் தற்போது இயக்கியுள்ள படம் 'பள்ளி பருவத்திலே'.
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம், 'கற்றது தமிழ்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, பொன்வண்ணன், ஊர்வசி, சுஜாதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிகுமார் :
இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் படத்திற்காக தான் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

உண்மைக் கதை :
தஞ்சை மாவட்டத்தின் கிராமத்தில் இருந்த அரசுப் பள்ளியின் தலைமையாசியரியாக இருந்த ஒருவர் 100 பேர் படித்த பள்ளியை 2 ஆயிரம் பேர் படிக்கும் பள்ளியாக மாற்றினார். நல்லாசிரியர் விருது பெற்றார். ஊரே அவரை மெச்சியது.

ஊதாரி மகன் :
ஆனால் அவரது சொந்த மகன் ஊதாரியாக எதற்கும் உதவாதவனாக வளர்ந்தான். ஊர்ப் பிள்ளைகளை கல்வி ஊட்டி வளர்த்தவர் தன் சொந்தப் பிள்ளையை வளர்க்கத் தவறி விட்டார். இதை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறேன்.

ஆசிரியராக கே.எஸ்.ரவிகுமார் :
அந்த ஆசிரியர் கேரக்டரில் நடிக்க பொருத்தமானவர் கே.எஸ்.ரவிகுமார் என்ற முடிவு செய்து அவரிடம் கதை சொன்னேன். ஒரு புதுமுக இயக்குனர் என்றும் பார்க்காமல் கதை பிடித்து நடித்துக் கொடுத்தார். அந்த கேரக்டரும், அதை நான் படமாக்கிய விதமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

சம்பளம் வேண்டாம் :
கடைசி நாளன்று என்னை அழைத்துப் பாராட்டிய அவர், 'இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும், தேசிய விருதும் வாங்கும். இப்படி ஒரு நல்ல ப்ராஜக்டில் வேலை செய்ததற்காக பெருமைப்படுகிறேன். எனக்கு சம்பளம் வேண்டாம்' என்று கூறிவிட்டுச் சென்றார். அதோடு அதுவரை வாங்கிய சம்பளத்தை தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பி விட்டார்' என்கிறார் வாசுதேவ் பாஸ்கர்.