மக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டாங்க: நயன் பற்றி ட்வீட்டிய விக்னேஷ் சிவன்
சென்னை: மக்கள் இதை காலகாலத்துக்கும் மறக்க மாட்டார்கள் என்று ட்வீட்டியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த படம் அறம். அறம் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து ஹிட்டாக்கிவிட்டனர்.
அறம் படம் ரிலீஸாகி 50 நாட்களாகியுள்ளது.
நயன்தாரா
ஒரு நல்ல படம் வென்றால் அது எப்பொழுதுமே மக்களின் வெற்றி. கால காலத்திற்கும் நினைவில் இருக்கும் படத்தை கொடுத்த அறம் குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவுக்கு குடோஸ் #ArammHits50 என ட்வீட்யுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

கோபி
கோபி நயினார் நயன்தாராவை வைத்து அறம் 2 படத்தை எடுக்கும் திட்டம் வைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது நயன்தாரா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கத்தி
கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறினார் கோபி நயினார். அறம் படத்தை பார்த்த ரசிகர்கள் அட கோபி நயினார் சொன்னது உண்மை தான்பா என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரொமோஷன்
காதலி நயன்தாராவின் அறம் படத்தை விளம்பரப்படுத்தியது, தற்போது பாராட்டி ட்வீட் போட்டுள்ளது என்று விக்னேஷ் சிவன் தனது பாசத்தை காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











