திரைத் துளி
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம்செய்யப்போவதில்லை என நடிகை குஷ்பூ அறிவித்துள்ளார்.
குஷ்பூ ஆண்ட்டி பித்ரி என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் இறுதி கட்டபடப்பிடிப்பு பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனது 7 மாத குழந்தையுடன் குஷ்பூ வந்திருந்தார்.படப்பிடிப்பு முடிந்தவுடன் குஷ்பூ செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இந்தபடத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளேன்.
நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். என் குழந்தையையும் நல்ல முறையில்கவனித்துக் கொள்வேன்.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்யுமாறு எனக்கு எல்லாஅரசியல் கட்சிகளிடமிகுந்தும் அழைப்பு வந்துள்ளது. என் கணவருக்கு இதில்விருப்பம் இல்லாததால் நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன்என்றார்.


Click it and Unblock the Notifications











