Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஷாக்கிங்.. அன்பே சிவம், புதுப்பேட்டை பட தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கே. முரளிதரன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
அன்பே சிவம், புதுப்பேட்டை, பகவதி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை தனது லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தவர் முரளிதரன்.
அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பாபா ரீ-ரிலீஸ்..ரஜினி முடிவெடுத்தது எதனால்?..2-கே கிட்ஸை குறி வைக்கும் படமா? ..வெற்றி கிடைக்குமா?
தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் எனும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கே. முரளிதரன் இன்று மதியம் மாரடைப்பு காரணமாக கும்பகோணத்தில் உள்ள தனது வீட்டில் உயரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் கே. முரளிதரனின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
90களில் தொடங்கப்பட்ட லக்ஷ்மி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளரான கே. முரளிதரன் ஏகப்பட்ட ஹிட் படங்களை தயாரித்துள்ளார். சரத்குமாரின் அரண்மனை காவலன் படத்தில் தொடங்கி பல படங்களை தயாரித்த இந்த நிறுவனத்துக்கு கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தன. சில ஆண்டுகளாக புதிய படங்களை தயாரிக்காமல் இருந்து வந்தார் கே. முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பே சிவம்
அன்பே சிவம், புதுப்பேட்டை, பகவதி, சிலம்பாட்டம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல பெரிய படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் திரையுலகில் ஏகப்பட்ட இயக்குநர்களையும், நடிகர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை கே. முரளிதரனுக்கு உண்டு. இந்நிலையில், அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சென்னையில் இறுதிச்சடங்கு
கும்பகோணத்தில் கே. முரளிதரன் இன்று காலமான நிலையில், அவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், நாளை அல்லது நாளை மறுதினம் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த கே. முரளிதரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சித்ரா லட்சுமணன் இரங்கல்
சித்ரா லட்சுமணன் இந்த தகவல தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, எனது நண்பன் மறைந்து விட்டார். இப்படியொரு பதிவை போடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை என வேதனையடைந்துள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.