கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினியின் ரூ. 22 .21 கோடி சொத்தை கையகப்படுத்தியது எக்ஸிம் வங்கி
மும்பை: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் பிணையாக கொடுத்திருந்த ரூ. 22 கோடி சொத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்தியுள்ளது. வங்கியின் அனுமதி இல்லாமல் அந்தச் சொத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்து அவரது இளைய மகள் சௌந்தர்யா மோஷன் கேப்சர் முறையில் இயக்கிய அனிமேஷன் படம் கோச்சடையான். இப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்படம் தொடர்பாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயன்மென்ட் தொடர்ந்த வழக்கில் லதா ரஜினி தனக்கு சொந்தமான சொத்தை பிணையாக கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள ரூ. 22 கோடி மதிப்புள்ள இந்த சொத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்தியதாக பத்திரிக்கை மூலம் அறிவித்துள்ளது. அதில், வங்கிக்கு தெரியாமல் இந்த சொத்தை யாரும் வாங்கவோ , விற்கவோ கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் இயக்குநர் முரளி மனோகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், நான்கு நாட்களுக்குள் கடன் தொகைக்கு ஈடான வங்கி உத்தரவாதம் அளிக்கப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications