Don't Miss!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
2.ஓ மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம்! - லைகா
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் 2.ஓ படத்தின் மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்ஸன், அக்ஷய் குமார் நடித்துவரும் படம் 2.ஓ (2.O). இந்தப் படத்தின் 75 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
ரூ 350 கோடி செலவில் பிரமாண்டத்தின் உச்சமாக தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் டிசைன், படங்கள் என எதுவுமே வெளியாகாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.
படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பை வரும் நவம்பர் 20-ம் தேதி வெளியிடப் போவதாக சில தினங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று லைகா நிறுவன நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள செய்தியில், "இந்திய சினிமா என்னவென்று உலகுக்குக் காட்டும் நேரம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு மாதம்தான். சூப்பர் ஸ்டாரும் கிலாடியும் இந்திய சினிமா என்னவென்று உலகுக்குக் காட்டுவார்கள்... கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது," என்று கூறியுள்ளார்.
அந்தத் தேதியில் அநேகமாக படத்தின் டீசரும் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.