Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
2.ஓ மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம்! - லைகா
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் 2.ஓ படத்தின் மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்ஸன், அக்ஷய் குமார் நடித்துவரும் படம் 2.ஓ (2.O). இந்தப் படத்தின் 75 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
ரூ 350 கோடி செலவில் பிரமாண்டத்தின் உச்சமாக தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் டிசைன், படங்கள் என எதுவுமே வெளியாகாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.
படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பை வரும் நவம்பர் 20-ம் தேதி வெளியிடப் போவதாக சில தினங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று லைகா நிறுவன நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள செய்தியில், "இந்திய சினிமா என்னவென்று உலகுக்குக் காட்டும் நேரம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு மாதம்தான். சூப்பர் ஸ்டாரும் கிலாடியும் இந்திய சினிமா என்னவென்று உலகுக்குக் காட்டுவார்கள்... கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது," என்று கூறியுள்ளார்.
அந்தத் தேதியில் அநேகமாக படத்தின் டீசரும் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.