Don't Miss!
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- News போரூர் பக்கம் போறீங்களா? அப்போ உங்களுக்கு நல்ல செய்தி.. வந்தது சூப்பர் வசதி!
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டி... ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்
தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகை ஜெயசுதாவுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தத் தேர்தல் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதாவுடன் நடிகர் ராஜேந்திரபிரசாத் மோதுகிறார்.
ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால் போட்டியில் இருந்து விலகி விட்டார்.
அவர் ஜெயசுதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு அணியினரும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் போட்டியில் இருந்து வாபஸ் பெறும்படி ஜெயசுதாவுக்கு மிரட்டல் வந்துள்ளதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 43 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ராஜேந்திரபிரசாத், முரளிமோகன் போன்றோர் வயதில் எனக்கு மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் நான்தான் சீனியர்.
அவர்களுக்கு முன்பே நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். தெலுங்கு நடிகர் சங்கத்தை உருவாக்கியதிலிருந்து அதில் உறுப்பினராக இருக்கிறேன். துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதால் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. போட்டியிலிருந்து விலகும்படி அரசியல்வாதிகள் மிரட்டுகிறார்கள்.
இந்த மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன். மிரட்டலுக்கு பிறகு தேர்தலில் இன்னும் தீவிரமாகி விட்டேன். நலிந்த நடிகர்- நடிகைகளுக்கு உதவிகள் செய்யவும், அரசிடம் இருந்து சலுகைகள் பெற்றுத்தரவும்தான் தேர்தலில் நிற்கிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்," என்றார்.