Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கேட்பதா?: தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்
சென்னை: ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைபடத்துக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து, கடந்த டிசம்பர் 12ம் தேதி, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த படம் லிங்கா. ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.
படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, தயாரிப்பாளரிடமும், ரஜினியிடமும் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டனர். இதனை வலியுறுத்தி போராட்டத்திலும் விநியோகஸ்தர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, துணைத் தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர்கள் டி.சிவா, ராதா கிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
"‘லிங்கா' படபிரச்சினையில் விநியோகஸ்தர்கள் பட வெளியீட்டிலிருந்து தொடர்ந்து ‘லிங்கா' படத்தின் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கும், விநியோகஸ்தர்கள் போட்ட ஒப்பந்தத்தை மீறி பல்வேறு பிரச்சினைகள் செய்து வருகிறார்கள்.
கடந்த காலங்களில் ரஜினிகாந்த் நடித்த சுமார் 97 சதவீதம் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ‘லிங்கா' படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க வேண்டும்.
அதைவிடுத்து படத்தின் தயாரிப்பாளரையும், ரஜினிகாந்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவித்தது நமது தொழில் தர்மத்திற்கு மாறானது. மேலும் அது கண்டனத்திற்குரியது.
திரையுலகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேவையற்ற முறையில் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது. எனவே உண்மையில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
தவிர இதுபோன்ற சூழ்நிலையில் ஒற்றுமைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நமது திரையுலக்கிற்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும் " இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!