சிம்பு படத்தை ரிலீஸ் செய்ய உதவிய லிங்குசாமி: ட்விட்டரில் உருகிய கவுதம் மேனன்
சென்னை: அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸாக உதவிய இயக்குனர் லிங்குசாமிக்கு இயக்குனர் கவுதம் மேனன் நன்றி தெரிவித்துள்ளார்.
சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை இயக்குனர் கவுதம் மேனன் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியிடவில்லை.
பிரச்சனைகளைத் தாண்டியே படம் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கவுதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மிஸ்டர் ஜஸ்வந்த் சிங் பந்தாரி திருப்பூர் சுப்பிரமணியம் சார் நன்றி. இரவு 2 மணிக்கு கூட ஏஒய்எம் படத்திற்காக நீங்கள் அளித்த ஆதரவுக்கும், வழிகாட்டலுக்கும் நன்றியுடன் இருப்போம்.
கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்து உதவியதற்கு நன்றி. நன்றியுடன் இருப்பேன் இயக்குனர் லிங்குசாமி. சினிமா துறையில் சகோதரத்துவம் இன்னும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications