Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அருமையான தாலாட்டு பாடல்கள்: ஆபிஸில் கேட்டு தூங்கிடாதீங்கய்யா!
சென்னை: உலக தூக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஏகப்பட்ட தாலாட்டு பாடல்கள் இருந்தும் இந்தியர்கள் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள்.
இன்று உலக தூக்க தினம் ஆகும். இன்றைய டென்ஷன் உலகில் அனைவராலும் படுத்தவுடன் தூங்க முடிவது இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் தான் தூக்கம் இல்லாமல் தவிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நாளில் உங்களை தூங்க வைக்க உதவும் சில திரைப் பாடல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தூக்கம் உன் கண்களை
ஆலயமணி படத்தில் எஸ். ஜானகி பாடிய தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே பாடலை கேட்டால் தூக்கம் வராதவர்களுக்கு கூட வரும்.
நீரோடும் வைகையிலே
பார் மகளே பார் படத்தில் வரும் பாடல்
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....
இந்த பச்சைக்கிளிக்கொரு
நீதிக்கு தலை வணங்கு படத்தில் வரும் இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் பாடலை கேட்டால் நிச்சயம் தூக்கம் வரும்.
காலமிது
சித்தி படத்தில் வரும் பாடல்
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
கண்ணன் வருவான்
பஞ்சவர்ணக்கிளி பட பாடல்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
மன்னவா மன்னவா
வால்டர் வெற்றிவேல் பட பாடல்
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும்தேனோ மரகத வீணை தானோ
ஆரிரோ ஆராரிரோ
தெய்வத் திருமகள் பட பாடல்
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஆராரோ ஆரிராரோ
சிறுத்தை பட பாடல்
ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்