Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நோ நோ... சிம்பு படத்தை நாங்கள் வாங்கவே இல்லை!- லைகா நிறுவனம் மறுப்பு
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ரொம்ப நாட்களாக நடித்துக் கொண்டிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தை தாங்கள் வாங்கவில்லை என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் உள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் வாங்கி தங்கள் பேனரில் வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில்தான் பீப் பாட்டு பிரச்சினையை இழுத்துவிட்டார் சிம்பு. நல்ல காலத்திலேயே அவர் படத்தை வாங்க விநியோகஸ்தர்களுக்கு ஆர்வம் கிடையாது. இப்போதோ இவர் போஸ்டரைப் பார்த்தால் சாணி அடிக்கும் என்ற நிலை.
எனவே அவர் நடித்து முடங்கிக் கிடக்கும் இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடையடா போன்ற படங்கள் வெளிவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நேரம் பார்த்து, சிம்பு படத்தை நாங்கள் வாங்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட் ராஜு மகாலிங்கம் கூறுகையில், "இப்போது நாங்கள் ரஜினி நடிக்கும் 2.ஓ, ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம், சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்குப் படம் மற்றும் அக்ஷய் குமார் நடிக்கும் இந்திப் படம் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறோம்.
சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தை நாங்கள் வாங்கவில்லை. தாரை தப்பட்டை படத்தை அய்ங்கரன் நிறுவனம்தான் வாங்கியுள்ளது. நாங்கள் அல்ல," என்றார்.