Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கத்தியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கும் லைகா!
சென்னை: கத்தி படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கிறது லைகா நிறுவனம்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தை முதல் முறையாக லைகா நிறுவனம் தயாரித்த போது ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தது. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிறுவனத்துடன் எப்படி விஜய் இணையலாம் என தமிழ் அமைப்புகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இதன் விளைவாக கத்தி படம் முதலில் அய்ங்கரன் நிறுவனப் பெயரில் வெளியானது.
ஆனால் உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடந்த வழக்கில், 'லைகா நிறுவனம் தமிழகத்தில் படங்கள் தயாரிக்க தடை இல்லை என்றும், லைகா பேனரிலேயே அவர்கள் படங்களை வெளியிடலாம், இதை எதிர்க்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும் தீர்ப்பு வெளியானது.
இதைத் தொடர்ந்து பிரமாண்டமாக தயாரிப்பில் குதித்தது லைகா. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை வைத்து 2.ஓ, பாலிவுட்டின் முதல் நிலை நடிகர் அக்ஷய் குமாரை வைத்து கத்தி ரீமேக், தெலுங்குப் படம் என அடுத்தடுத்து 6 படங்களைத் தயாரித்து வருகிறது.
இப்போது மீண்டும் விஜய்யை வைத்து தமிழில் படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. விஜய் இப்போது நடித்து வரும் 60வது படம முடிந்ததும் இந்த புதிய பட வேலைகள் தொடங்கவிருக்கின்றன.