Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினியுடன் 2.ஓ தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் சந்திப்பு!
ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான 2.ஓ தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் நேற்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து வரும் படம் 2.ஓ. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு கடந்த மே மாதம் முடிந்தது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி சம்பந்தப்படாத காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகின்றன.
முற்றிலும் 3 டி படமாக உருவாகிறது 2.ஓ.
ரஜினி தனது ஓய்வை முடித்துக் கொண்டு விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த சூழலில் நேற்று 2.ஓ படத் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் சென்னை வந்தார். ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் லைகா நிறுவன கிரியேடிவ் ஹெட் ராஜு மகாலிங்கமும் இருந்தார்.