Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘மாலை நேரத்து மயக்கம்’... கனவு நினைவானதாக கீதாஞ்சலி செல்வராகவன் மகிழ்ச்சி
சென்னை: மாலை நேரத்து மயக்கம் படம் மூலம் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனான இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன்.
இவர் தற்போது மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் புத்தாண்டு அன்று ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், இயக்குனர் செல்வராகவன், இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன், இசையமைப்பாளர் அம்ரித், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் கோலா பாஸ்கர், படத்தின் நாயகன் பாலகிருஷ்ண கோலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கீதாஞ்சலி செல்வராகவன், "நானும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம், அப்போதே நாங்கள் இருவரும் ஒன்றாக இனைந்து வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். அந்த கனவு இப்போது நினைவாகி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.