Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மாரி பஞ்சாயத்து... மொத்த பாரத்தையும் தனுஷ் தலையில் சுமத்திய சரத்குமார்!
மாரி படம் ஒருவழியாக ரிலீசாகிவிட்டது. அந்தப் படம் வெற்றியா தோல்வியா என்ற விவகாரத்துக்குள் போகும் முன், படத்தின் தயாரிப்பாளரான சரத்குமார், ஹீரோ தனுஷைப் படுத்திய பாட்டை பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறது மீடியா.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ராதிகா சரத்குமார், சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன். இவர்களின் முந்தை இரு படங்கள் சரியாகப் போகாததால் ஏற்பட்ட நஷ்டத்தைக் காட்டி மாரி படத்தை நிறுத்தப் பார்த்திருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்தபோதே, நேற்று அதிகாலை 4 மணிக்கு தனுஷுக்கு போன் அடித்திருக்கிறார் சரத்குமார். 'தம்பி, உங்க சம்பளத்துல ஒரு ரெண்டு கோடி விட்டுக் கொடுத்தா படம் வெளியாகிடும்' என்று கேட்க, தனுஷும் யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டாராம்.
ஏற்கெனவே இந்தப் படத்தின் சேட்டிலைட் சேனல் உரிமையை எந்த டிவியும் வாங்காத நிலையில், ரூ 9 கோடி கொடுத்து தனுஷே வாங்கிக் கொண்டது நினைவிருக்கலாம். இதை தனுஷ் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அதுதான் உண்மை என்கிறது தயாரிப்பு வட்டாரம்.
ஆக, தனுஷுக்கு இந்தப் படம் நடித்ததால் ஒரு பலனும் இல்லை. அந்த சேட்டிலைட் உரிமை விற்றால்தான் ஏதாவது தேறும் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் தரப்பு.