Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
மாவீரன் கிட்டு.. தேசிய விருதுகளைப் பெற்றுத் தரும்... சுசீந்திரன், பார்த்திபன் நம்பிக்கை
சென்னை: விஷ்ணு நடித்துள்ள மாவீரன் கிட்டு படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அதன் இயக்குநர் சுசீந்திரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நாயகனாக நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. வெண்ணிலா கபடி குழு', 'ஜீவா' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் சுசீந்திரன், விஷ்ணு கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தின் நாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் சுசீந்திரன் பேசுகையில், "அழகர் சாமியின் குதிரை' திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் 'மாவீரன் கிட்டு' திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷ்ணு, "நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்'' என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதேபோல், விழாவில் இயக்குநர் சமுத்திரகனி பேசுகையில், "இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறேன்" என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, ''இப்படத்தின் டீசரை பார்க்கும்போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படத்தை பார்க்கும்போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவதுபோல் தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் பேசுகையில் " 'ஆயிரத்தில் ஒருவன்' , 'அழகி' திரைப்படத்தைப் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. 'ஹவுஸ்புல்' திரைப்படத்துக்கு பின் இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன்" என்றார்.