Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"மேடி"க்காக "ரவுடி"யாக மாறினார் விஜய் சேதுபதி!
சென்னை: இறுதிச்சுற்று படத்தைத் தொடர்ந்து நடிகர் மாதவன், விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம்- வேதா படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
4 ஆண்டு கழித்து மாதவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த வெற்றியால் மாதவன் அடுத்து எந்த மாதிரியான படத்தில் நடிக்கப் போகிறார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் மாதவனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. 'ஓரம்போ' படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம்-வேதா படத்தில் மாதவன் நடிக்கவிருக்கிறார்.
இதில் மாதவனுடன் இணைந்து இன்னொரு நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாதவன் என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி வேதா என்ற கேங்க்ஸ்டர் வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் "வொய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன். கடந்த ஒரு வருடமாக இந்தப் படம் பற்றிய விவாதங்கள் நடந்து தற்போதுதான் இறுதி வடிவத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.மாதவனின் இறுதிச்சுற்று படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக மாதவன்-விஜய் சேதுபதி இந்தப் படத்தின் மூலம் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது ஏற்படத் தொடங்கியிருக்கிறது.