ஃபேனி கான் படத்தில் இருந்து வெளியேறிய மாதவன்: நினைத்ததை சாதித்த ஐஸ்வர்யா?
மும்பை: ஐஸ்வர்யா ராயின் ஃபேனி கான் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் மாதவன்.
ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் உள்ளிட்டோரை வைத்து அதுல் மஞ்ச்ரேகர் இயக்கும் படம் ஃபேனி கான். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மாதவன் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் மாதவன்.

மாதவன்
எனக்கு ஃபேனி கான் படத்தின் கதை மிகவும் பிடித்துள்ளது. ஆனால் என்னிடம் டேட்ஸ் இல்லை. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் மாதவன்.

ராஜ்குமார் ராவ்
மாதவன் வெளியேறிய நிலையில் ஃபேனி கான் படத்தில் ராஜ்குமார் ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய்
மாதவனை விட வயதில் குறைவான ராஜ்குமார் ராவுடன் ஜோடியாக நடிக்கவே ஐஸ்வர்யா ராய் விரும்பியதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் விருப்பப்படியே நடந்துள்ளது.

படப்பிடிப்பு
ஃபேனி கான் படத்தின் படப்பிடிப்பு வரும் 3ம் தேதி துவங்குகிறது. பிற நடிகர்கள் தேர்வில் ஐஸ்வர்யா ராயோ, அனில் கபூரோ தலையிடவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











