Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களுக்கு அபராதம்: கலெக்டர் அன்சுல் மிஷ்ரா அதிரடி
மதுரை: மதுரை மாநகரில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலித்த திரையங்குகளுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஷ்ராவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகரில் புகார்களுக்கு ஆளான திரையரங்குகளை கண்காணிக்குமாறு துணை கலெக்டருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் துணை கலெக்டர் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் மற்றும் ஞான ஒளிவுபுரம், வண்டியூர், வக்கீல் புது தெரு, வில்லாபுரம், புதுநத்தம் ரோடு, திருநகர் உள்பட 8 தியேட்டர்களில் திடீர் சோதனை மேற்கொண்டன.
இந்த திரையரங்குகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 4 திரையரங்குகளுக்கு தலா ரூ.6,000ம், 2 திரையரங்குகளுக்கு தலா ரூ.2 ,000 அபராதம் விதித்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.