Just In
- 7 min ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
- 1 hr ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
- 1 hr ago
ரம்யா பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்.. கடுப்பான அனிதா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
இது லவ் மேரேஜ் இல்லையாம்.. சிவகார்த்திகேயன் பட ஹீரோயினுக்கு நாளை திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து!
Don't Miss!
- News
ஒரு மனுச பொய் சொல்லலாம்.. ஆனால் ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது.. டிரம்ப் பேசிய 30573 பொய்கள்!
- Sports
கோவாவை சமாளித்த கேரளா பிளாஸ்டர்ஸ்.. டிராவில் முடிந்த போட்டி!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- Automobiles
இந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது? வாங்க பார்ப்போம்!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை
மதுரை: லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சி மூலம் தான் பல வீட்டு குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறுகிறார்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனு
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

லட்சுமி
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி கேட்கிறார். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் கள்ளத் தொடர்புகள் குறித்து பேசப்படுகிறது என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கேள்விகள்
சில நேரங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் திட்டுவதுடன் ஒருவரையொருவர் தாக்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற பங்கேற்பாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறார் லட்சுமி. பலரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிவியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் குழந்தைகள் கூட கலந்து கொள்கிறார்கள். தனி மனிதரின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

உயர் நீதிமன்றம்
கல்யாண சுந்தரத்தின் மனுவை விசாரித்த நீதிமன்றம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு ஜூன் 18ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.