கண்டுக்கினியா... 'டங்காமாரி'ன்னா இத்தான் அர்த்தமாம்!

By Shankar

சமீபத்தில் வெளியான பாடல்கள் படு சூப்பர் ஹிட்டானது அனேகன் படத்தில் இடம்பெற்ற 'டங்காமாரி ஊதாரி புட்டுக்கின நீ நாறி'...

மத்திய, வட சென்னைவாசிகளுக்கு டங்காமாரி பழக்கமான வார்த்தை. ஆனால் மற்றவர்கள் ஏதோ அதை கேவலமான வார்த்தைகளின் தொகுப்பாகப் பார்த்தார்கள். முகம் சுளிக்கவும் செய்தார்கள்.

Magudeswaran's explanation to Dangamari word

ஆனால் டங்காமாரி என்பது கெட்ட வார்த்தை அல்ல. நல்ல வார்த்தைதான். அடங்காமாரி என்பதுதான் சற்று மருவி டங்காமாரியாக வந்துவிட்டது என்கிறார் கவிஞர் மகுடேஸ்வரன்.

இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதைப் படியுங்கள்:

டங்காமாரி, ஊதாரி' என்று ஒரு பாட்டு தொடங்குகிறது. ஊதாரிக்குப் பொருள் தெரியும். அதென்ன டங்காமாரி ? அடங்காமாரி, அடங்காப்பிடாரி' போன்ற வசவுச் சொற்களைப் பற்பல பகுதிகளில் கேட்கலாம். ‘அடங்காமாரி' என்பதன் சென்னை வழக்குத்தான் ‘டங்காமாரி'. அடங்காமாரியை விரைந்து நாவழுக்கும்படி சொன்னால் ‘டங்காமாரி' என்ற ஒலிப்பை அடையும்.

'அடங்காமாரி நாயி...' என்று வைவார்கள். அடங்காதவன், திமிர் பிடித்தவன், தான்தோன்றி என்பன பொருள்கள். மார்' என்பது பலர்பால் விகுதிகளில் ஒன்று. மாமன்மார், அத்தைமார் என்போம். பெரியோர்களே, தாய்மார்களே...' என்பது வழக்கமான மேடைவிளிப்பு. மார் என்னும் விகுதியின் திரிபே மாரி. அதனால், ‘அடங்காமாரி'தான் டங்காமாரி !

-எப்பூடி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X