Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.. மக்களின் பார்வைக்குத் திறந்திருக்கும் 'மகிழ்மதி ராஜ்ஜியம்'!
ஐதராபாத் : எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் நடிப்பில் உருவான 'பாகுபலி' படம் இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்த ஒரு படமாக இடம் பிடித்துவிட்டது.
அந்தப் படத்திற்காக அரண்மனை வடிவில் பிரம்மாண்டமான அரங்குகள் உருவாக்கப்பட்டன. அவற்றில்தான் படத்தில் வரும் மகிழ்மதி அரண்மனை மற்றும் குந்தலதேசம் அரண்மனை ஆகியவை உருவாக்கப்பட்டன.
பல கோடி ரூபாய் செலவில் வெகு பிரமாண்டமாக உருவான அந்த அரங்குகள் படம் பார்க்கும் போது வியக்க வைத்தன.
பாகுபலி :
பாகுபலி, பல்வால்தேவன் ஆகியோருக்கு இடையேயான ராஜ்ஜியப் பகையையும், காளகேயர்களுடனான போர்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவான வரலாற்றுக் கற்பனைத் திரைப்படம்தான் 'பாகுபலி'. அதன் பிரமாண்ட உருவாக்கத்தால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது 'பாகுபலி'.
பிரமாண்ட கலை இயக்கம் :
கலை இயக்குனர் சாபு சிரில் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் அந்த அரங்குகள் அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் போர்க் கருவிகள் உருவாக்கம், தேர்கள் உருவாக்கம் என சரித்திரக் காலப் பொருட்கள் பலவற்றையும் உருவாக்கினார்கள்.
படப்பிடிப்பு முடிந்தாலும் :
பாகுபலி திரைப்படம் அதன் பிரமாண்ட மேக்கிங்கால் இந்தியத் திரையுலகில் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது. ஷூட்டிங்குகாக உருவாக்கப்பட்ட அரங்குகள் அனைத்தும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கலைக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டன.
பொதுமக்கள் பார்வைக்கு :
'பாகுபலி 2' படமும் தற்போது ஓடி முடித்துவிட்டதால், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் போடப்பட்ட அந்த அரங்குகள் தற்போது பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. சினிமாவை அதிகம் விரும்பிப் பார்க்கும் தெலுங்கு மக்கள் தற்போது அவற்றை அதிக ஆர்வத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள்.
மகிழ்மதி ராஜ்ஜியம் :
ஐதராபாத்தின் அடையாளமாக கோல்கொண்டா கோட்டை, சார்மினார், உசைன் சாகர் ஏரி ஆகியவற்றுடன் இனி மகிழ்மதி அரண்மனையும் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை போலும்.