Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காஸ்ட்லி விவாகரத்து: வாரிசு நடிகரை பிரிந்த நடிகைக்கு ரூ. 15 கோடி ஜீவனாம்சம்
மும்பை: சல்மான் கானின் தம்பி அர்பாஸை கானை பிரிந்த அவரின் மனைவி மலாய்க்கா அரோராவுக்கு ரூ. 15 கோடி ஜீவனாம்சம் கிடைத்துள்ளதாம்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானும், அவரது மனைவியும், நடிகையுமான மலாய்க்கா அரோராவும் விவாகரத்து கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ. 15 கோடி
மலாய்க்கா அரோராவுக்கு அர்பாஸ் கான் தரப்பில் இருந்து ரூ. 15 கோடி ஜீவனாம்சம் அளிக்கப்பட்டுள்ளதாம். மலாய்க்காவுடன் தான் அவரின் மகன் அர்ஹான் தங்கியுள்ளார். ஆனால் அர்பாஸ் தனது மகனை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்க அனுமதித்துள்ளார் மலாய்க்கா.
மலாய்க்கா
தனக்கும், மகனுக்கும் ரூ. 10 கோடியாவது தர வேண்டும் என்று மலாய்க்கா கேட்ட நிலையில் ரூ. 15 கோடி கிடைத்துள்ளது. ரொம்ப காஸ்ட்லி விவாகரத்து என்கிறது பாலிவுட்.
அர்பாஸ் கான்
மலாய்க்காவும், அர்பாஸும் 18 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொண்டுள்ளனர். மலாய்க்காவுக்கு தனது கணவர் அவர் அண்ணன் சல்மான் கானின் நிழலில் வாழ்வது பிடிக்கவில்லையாம்.
சல்மான் கான்
சல்மான் கானுக்கு மலாய்க்காவின் நடை உடை மற்றும் நட்பு வட்டாரத்தை சுத்தமாக பிடிக்கவில்லையாம். விவாகரத்திற்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற மலாய்க்கா தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மலாய்க்கா அரோரா கான் என்று எழுதியிருந்ததை பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து கானை நீக்குமாறு கூறியுள்ளார்.