Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.
மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ முகமத் நஜிப் பின் துன் அப்துல் ரசாக் நேற்று சென்னை வந்தார். ஐந்து நாள் இந்திய பயணமாக வந்துள்ள அவரை வரவேற்று சென்னையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அவருடன் மனைவி டதின் பதுகா செரி ரோஸ்மா மன்சூரும் வந்துள்ளார். இருவருமே ரஜினியின் தீவிர ரசிகர்கள்.
தங்கள் சென்னைப் பயணத்தின்போது ரஜினியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ரஜினி வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நஜிப் ரசாக்கும் அவர் மனைவியும் வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார்.
ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர் மலேசிய பிரதமரும் அவர் மனைவியும்.
ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக வரும்படி இந்த சந்திப்பில் அழைப்பு விடுத்தனர். இதுகுறித்த எந்த முடிவையும் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை.