Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ்நாட்டு இளைஞர்கள் போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு! - மம்முட்டி
திருவனந்தபுரம்: தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்று நடிகர் மம்முட்டி பாராட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அலையலையாகக் கிளம்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் குவிந்து அறவழியில் போராடி வருகின்றனர். சென்னைக்கு நிகராக மதுரை, கோவையில் பல லட்சம் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தப் போராட்டம்.
இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மம்முட்டி இதுகுறித்து அனுப்பியுள்ள வீடியோ பதிவில், "எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஒரு தலைவரின் துணையுமின்றி, ஆண் பெண் ஜாதி மதப் பாகுபாடின்றி, லட்சக்கணக்கான பேர் துளியும் வன்முறையில்லாமல் தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இந்தப் போராட்டம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள் தோழர்களே...", என்று கூறியுள்ளார்.