Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரைத் துளி
சட்டமேதை அம்பேத்கர் வேடத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று பிரபல மலையாள நடிகர் மம்முட்டிகூறியுள்ளார்.
நடிகர் மம்முட்டிக்கு சென்ற ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றதற்கான பாராட்டு விழா மும்பையில்நடந்தது. "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்ற படத்தில் நடித்தற்காக தேசிய விருதை மம்முட்டி பெற்றார்.
அதை பாராட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மக்கள் கலைக் கழகத்தின் சார்பில் மம்முட்டிக்குப் பாராட்டு விழாநடைபெற்றது. விழாவில் மம்முட்டி பேசுகையில், அம்பேத்கர் சட்டத்துறையின் தந்தையாகவும், சிறந்தசீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். அந்த கதாபாத்திரத்தை நான் ஏற்று நடித்தது எனக்கு பெருமையான விஷயம்.
நான் இந்த பாத்திரத்தில் நடிக்க முடியுமா? என சந்தேகப்பட்டேன். இயக்குனர் ஜாபர் படேல் என் மேல் நம்பிக்கைகொண்டு என்னை நடிக்க வைத்து வெற்றி கண்டார் என கூறினார்.
இந்த விழாவில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் பேசுகையில், மம்முட்டி நடிப்புத்திறமையால் கலைக்கு மொழி ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார் என பாராட்டினார்.
துணை முதல்வர் பூஜ்பால் கூறுகையில், அம்பேத்கார் படத்தில் சிறப்பாக நடித்து மம்மூட்டி வெற்றி பெற்றுள்ளார்.அடுத்தபடியாக அவர் சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா பூலேயின் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்றார்.
யு.என்.ஐ.