மணிரத்னத்திற்காக பாடல் ஆசிரியரான ஏ.ஆர். ரஹ்மான்
சென்னை: ஓகே கண்மணி படத்தில் வரும் மென்டல் மனதில் பாடல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் எடுத்துள்ள காதல் படம் ஓகே கண்மணி. தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் பாடல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

மென்டல் மனதில்
மென்டல் மனதில் என்ற பாடல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அதை யூடியூப்பில் பலர் பார்த்துள்ளனர்.

மணி, ரஹ்மான்
மென்டல் மனதில் பாடலை மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் சேர்ந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 17
மென்டல் மனதில் முழுப்பாடலும் வரும் 17ம் தேதி வெளியிடப்படுகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல்
பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள ஓகே கண்மணி படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்டு
மென்டல் மனதில் டீஸரைப் பார்த்த பலரும் அந்த பாடல் வரிகளை தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











