Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடையில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானி ராணுவத்திடமிருந்து இந்திய பைலட் தப்பும் காட்சி கற்பனையல்ல.. நிஜத்தில் நடந்த சம்பவம் என இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.
காற்று வெளியிடையில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானி ராணுவத்திடமிருந்து இந்திய பைலட் தப்பும் காட்சி கற்பனையல்ல.. நிஜத்தில் நடந்த சம்பவம் என இயக்குநர் மணிரத்னம் தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஹீரோ கார்த்தியும் அவரது இரு நண்பர்களும் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடமிருந்து தப்பிப்பது போல காட்டப்பட்டுள்ளது. இது சாத்தியமா என ஆன்லைன் மீடியாவில் சிலர் கேள்வி எழுப்பினர்.
ஆனால் இது கற்பனையல்ல... உண்மை சம்பவம் என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
"கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பர் 10 ம் தேதி இந்திய விமானப் படை வீரர் திலிப் பாருல்கரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. அந்த பேராபத்திலிருந்து மீண்டெழுந்து அடுத்த மூன்று தினங்களில் தனது நண்பர்கள் மல்விந்தர் சிங் க்ரேவல், ஹரிஷ் சிங்ஜி ஆகியோருடன் ராவல்பிண்டி கேம்பிலிருந்து தப்பித்தார். இதனை ஃபெய்த் ஜான்சன் எழுதிய 'ஃபோர் மைல்ஸ் டு கோ' என்ற நூலில் காணலாம். கார்த்தி தப்பிக்கும் காட்சிகள் இந்த நூலிலிருந்து எடுத்தாளப்பட்டவையே.
எனவே காற்று வெளியிடை படத்தின் ராணுவக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விக்கு இனி இடமிருக்காது என நம்புவதாக," இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.