மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் புதுப் படம் ஜனவரியில் ஆரம்பம்
காற்று வெளியிடை கவிழ்த்தாலும் மனம் தளராத மணிரத்னம் தன் அடுத்தப் படத்தை வரும் ஜனவரி 2018-ல் தொடங்குகிறார்.
இந்த முறையும் ஏஆர் ரஹ்மான் இசை, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் என பழைய கூட்டணியைத் தொடரும் மணிரத்னம், முற்றிலும் புதிய ஸ்டைலில் இந்தப் படத்தை உருவாக்கப் போகிறாராம் (முன்பே நாம் சொல்லியிருக்கிறோம்... இந்த முறை அவர் கையிலெடுக்கப் போவது சிலப்பதிகாரம், மணிமேகலை பின்னணியிலான கதை)

பெரும் நட்சத்திப் பட்டாளமே இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்... என நீள்கிறது பட்டியல். இவர்கள் அனைவருமே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டனர்.
படத்தை ஜனவரி 2018-ல் தொடங்குகிறார் மணிரத்னம் என்பது அதிகாரப்பூர்வ தகவல்.


Click it and Unblock the Notifications











