அடுத்து பாலிவுட் படம்... தனுஷுடன் கைகோர்க்கிறார் மணிரத்னம்!
விமர்சனங்கள் இருந்தாலும், ஓகே கண்மணி வெற்றிகரமாக ஓடுவதில் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் மணிரத்னம்.
அந்த சந்தோஷத்தோடு, அடுத்த வேலைக்கான ஆயத்தங்களில் இறங்கியுள்ளார். பாலிவுட் பட நிறுவனங்கள் சில அவரை அணுகி படம் பண்ணித் தர கேட்டுள்ளார்களாம்.
இதைத் தொடர்ந்து அடுத்து இந்தியில் படம் இயக்கப் போகிறார் மணிரத்னம்.

இதில் தனுஷை நாயகனாக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
தனுஷும் மணிரத்னத்துடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கெனவே ராஞ்ஜனா, ஷமிதாப் படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் நல்ல மார்க்கெட் உள்ளது தனுஷுக்கு.


Click it and Unblock the Notifications











